Latest News
ஆன்லைன் தடை மசோதா இன்று கவர்னருக்கு அனுப்பி வைப்பு?காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் பயங்கர தீ, 7 பேர் பலி - 15 பேருக்கு சிகிச்சைஇரட்டைத் தலைமையை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது; அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது: ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு வாதம்..12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் பேர் ஆப்சென்ட்: பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல்செப்.15ல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடக்கம்... தமிழக பட்ஜெட்டில் A டூ Z அசத்தல் அறிவிப்புகள்!!தொடர் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகுக' :அதிகரிக்கும் கொரோனா பரவலை தடுக்கும் புதிய விதிமுறைகள் வெளியீடு!!அருணாச்சலில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - தேனிக்கு கொண்டு வரப்படும் தமிழக அதிகாரியின் உடல்தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் மீது வழக்குப் பதிவுதமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!மார்ச் 26-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: நாளை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும்.! அதிமுக தலைமை அறிவிப்பு

எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த இயக்கத்தை அழித்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியே கட்சியை விட்டு வெளியேறு: சேலம் அருகே இபிஎஸ்-க்கு எதிராக போஸ்டர்

0

சேலம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தோல்விக்கு பொறுப்பேற்று அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்ய கோரி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு அதிமுகவானது எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டாக பிரிந்துள்ளது.

முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பெரும்பாலானோரை தனது ஆதரவாளர்களாக கொண்ட எடப்பாடி பழனிசாமி அதிமுகவை தன் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிட்டார்.

இதில் அவர் வசிக்கக்கூடிய சொக்காய் தோட்டம் என்ற வாக்குசாவடிலேயே, காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை விட 271 வாக்குகள் குறைவாக பெற்றிருந்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக படு தோல்வியை சந்தித்தது. அதிமுகவை விட காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் சுமார் 66ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

அதிமுகவின் இந்த படுதோல்வி தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமிக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் படுதோல்வி கடும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், சாரதா கல்லூரி சாலை, ஓமலூர் தேசிய நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவரை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அதிமுகவின் தொடர் தோல்விக்கு காரணமான எடப்பாடி பழனிசாமியே கட்சியை விட்டு வெளியேறு, எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த இயக்கத்தை அழித்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியே கட்சியை விட்டு வெளியேறு, அதிமுக தொண்டர்களை மதிக்காத எடப்பாடி பழனிசாமியே கட்சியை விட்டு வெளியேறு உள்ளிட்ட வாசகங்கள் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. இது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.