Latest News
ஆன்லைன் தடை மசோதா இன்று கவர்னருக்கு அனுப்பி வைப்பு?காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் பயங்கர தீ, 7 பேர் பலி - 15 பேருக்கு சிகிச்சைஇரட்டைத் தலைமையை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது; அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது: ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு வாதம்..12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் பேர் ஆப்சென்ட்: பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல்செப்.15ல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடக்கம்... தமிழக பட்ஜெட்டில் A டூ Z அசத்தல் அறிவிப்புகள்!!தொடர் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகுக' :அதிகரிக்கும் கொரோனா பரவலை தடுக்கும் புதிய விதிமுறைகள் வெளியீடு!!அருணாச்சலில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - தேனிக்கு கொண்டு வரப்படும் தமிழக அதிகாரியின் உடல்தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் மீது வழக்குப் பதிவுதமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!மார்ச் 26-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: நாளை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும்.! அதிமுக தலைமை அறிவிப்பு

போரில் உக்ரைனை ஒருபோதும் ரஷ்யாவால் தோற்கடிக்க முடியாது : ரஷ்ய அதிபர் புதின் பேச்சுக்கு அமெரிக்க அதிபர் ஜோபிடன் பதிலடி!!

0

போலந்து : போர்க்களத்தில் ரஷ்யாவை தோற்கடிக்க முடியாது என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் சூளுரைத்த நிலையில், உக்ரைனை ஒருபோதும் ரஷ்யாவால் வீழ்த்த முடியாது என்று அமெரிக்க அதிபர் ஜோபிடன் பதிலடி கொடுத்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்து நாளை மறுதினத்துடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன்  நேற்று முன்தினம் அறிவிக்கப்படாத பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். அங்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ரூ.4,135 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்தார். அங்கு இருந்து ரயில் மூலம் போலாந்து சென்ற ஜோபிடனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் தலைநகர் வார்ஷாவிற்கு சென்ற ஜோபிடன், போலந்து அதிபர் Andrzej Duda-வை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘உக்ரைனுக்கான அமெரிக்காவின் ஆதரவை யாராலும் அசைக்க முடியாது. முன்பை விட உறுதியாக உள்ள உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் துணை நிற்கும். போரில் உக்ரைனை ஒருபோதும் ரஷ்யாவால் தோற்கடிக்க முடியாது,’என்றார்.முன்னதாக  ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நாடாளுமன்றத்தில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்,’உக்ரைன் மக்களுக்கு எதிராக நாங்கள் சண்டையிடவில்லை. உக்ரைன் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் மேற்கத்திய எஜமானர்களின் பணயக்கைதிகளாக உக்ரைன் மக்கள் சிக்கி உள்ளனர். உக்ரைன் உடனான உள்ளூர் மோதலை உலகப் போராக மாற்ற அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் முயலுகிறது. இந்த போரை ஒருபோதும் நாங்கள் கைவிட மாட்டோம். அதே போல, அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து நாங்கள் விலகுகிறோம்’’ என்றார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.