Latest News
ஆன்லைன் தடை மசோதா இன்று கவர்னருக்கு அனுப்பி வைப்பு?காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் பயங்கர தீ, 7 பேர் பலி - 15 பேருக்கு சிகிச்சைஇரட்டைத் தலைமையை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது; அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது: ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு வாதம்..12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் பேர் ஆப்சென்ட்: பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல்செப்.15ல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடக்கம்... தமிழக பட்ஜெட்டில் A டூ Z அசத்தல் அறிவிப்புகள்!!தொடர் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகுக' :அதிகரிக்கும் கொரோனா பரவலை தடுக்கும் புதிய விதிமுறைகள் வெளியீடு!!அருணாச்சலில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - தேனிக்கு கொண்டு வரப்படும் தமிழக அதிகாரியின் உடல்தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் மீது வழக்குப் பதிவுதமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!மார்ச் 26-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: நாளை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும்.! அதிமுக தலைமை அறிவிப்பு

அதானி குழுமத்தில் செய்த முதலீட்டின் பலன் என்ன? எல்.ஐ.சி. விளக்கம்

0

அதானி குழுமத்தின் பங்குகள் கடந்த சில நாட்களில் பெரும் சரிவைச் சந்தித்திருந்த நிலையில், அதில் செய்துள்ள முதலீடுகளின் நிலை என்ன என்பது குறித்து இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் விளக்கமளித்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய தொழில் – வணிகக் குழுமமான அதானி குழுமம் குறித்து 106 பக்கங்கள், 720க்கும் மேற்பட்ட எடுத்துக்காட்டுகளைக் கொண்ட ஆய்வறிக்கை ஒன்றை ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டது.

அதானி குழுமம் “கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியை செய்துள்ளது” என்று அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியானதிலிருந்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து கடும் சரிவை எதிர்கொண்டன. இதையடுத்து, அதானி குழுமத்திற்கு கடன் கொடுத்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், அதானி குழுமத்தின் பங்குகளில் முதலீடு செய்திருந்த பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் நிலை குறித்து கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்பட்டன.

எல்.ஐ.சி. குறித்த கேள்வியும் விளக்கமும்

குறிப்பாக, இந்தியாவின் மிகப் பெரிய அமைப்புசார் முதலீட்டு நிறுவனமும், மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமுமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் அதானி குழுமத்தில் எவ்வளவு முதலீடு செய்துள்ளது, அந்த முதலீடுகளின் நிலை என்ன என தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில், இது தொடர்பான ஒரு விளக்கத்தை இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஜனவரி 30ஆம் தேதியன்று வெளியிட்டது.

“எல்ஐசி பொதுவாக தனது குறிப்பிட்ட முதலீடுகள் குறித்த தகவல்களை பொதுவெளியில் பகிர்ந்துகொள்வதில்லை. ஆனால், அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகள் குறித்து ஊடகங்களிலும் தொலைக்காட்சி சேனல்களிலும் சில தகவல்கள் பரவிவருகின்றன. ஆகவே அதானி குழும நிறுவனங்களில் பங்குகளிலும் கடனாகவும் எந்த அளவுக்கு முதலீடுசெய்திருக்கிறோம் என்பதை  பகிர்ந்துகொள்கிறோம்.

அதானி குழும நிறுவனங்களில் பங்குகளாகவும் கடனாகவும் 35,917.31 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளில் அதானி குழும நிறுவன பங்குகள் 30,127 கோடி ரூபாய் மதிப்பிற்கு வாங்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதியன்று அவற்றின் மொத்த சந்தை மதிப்பு 56,142 கோடி ரூபாய்,” என்று அந்த விளக்கத்தில் கூறப்பட்டிருந்தது.

எல்.ஐ.சி.யை கடந்து போகும் பெண்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதானியில் செய்த முதலீடு எவ்வளவு

மேலும் இது பற்றி விளக்கியுள்ள எல்.ஐ.சி.,

“அதானி குழும நிறுவனங்களில் மொத்தமாக 36,474.78 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் பல்வேறு காலகட்டங்களில் செய்யப்பட்டவை. எல்ஐசி வைத்துள்ள அதானி கடன் பத்திரங்களின் தர மதிப்பீடு AA என்ற அளவிலோ அல்லது அதற்கு மேலேயோதான் இருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்பான IRDAI நிர்ணியித்த விதிகளுக்கு உட்பட்ட தர மதிப்பீடு இது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, எல்ஐசி ஒட்டுமொத்தமாக 41.66 லட்சம் கோடி ரூபாய் சொத்துகளை நிர்வகித்துவருகிறது. அதில், அதானி குழுமத்தில் செய்யப்பட்ட மொத்த முதலீடு 0.975% மட்டுமே,” என்று தெரிவித்துள்ளது.

எல்.ஐ.சி. பில்டிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

“முதலீடு செய்துள்ள சொத்துகளின் சந்தை மதிப்பு எந்த திசையில் வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால், எல்ஐசி நீண்டகால நோக்கில்தான் முதலீடுகளைச் செய்கிறது. எல்ஐசி வாரியமும் அதன் நிர்வாகமும் இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரது நலனையும் பாதுகாக்கும் வகையில் எப்போதும் செயல்படும்” என எல்ஐசியின் அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை எதிரொலியாக, பங்குச் சந்தையில் அதானி குழுமம் கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது. இரண்டே நாட்களில் அதானி குழுமத்தின் மதிப்பு ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமாக குறைந்துவிட்டது. அதன் விளைவாக, கௌதம் அதானியின் சொத்து மதிப்பும் குறைந்து போனதால், உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்த அவர் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.