Latest News
ஆன்லைன் தடை மசோதா இன்று கவர்னருக்கு அனுப்பி வைப்பு?காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் பயங்கர தீ, 7 பேர் பலி - 15 பேருக்கு சிகிச்சைஇரட்டைத் தலைமையை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது; அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது: ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு வாதம்..12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் பேர் ஆப்சென்ட்: பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல்செப்.15ல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடக்கம்... தமிழக பட்ஜெட்டில் A டூ Z அசத்தல் அறிவிப்புகள்!!தொடர் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகுக' :அதிகரிக்கும் கொரோனா பரவலை தடுக்கும் புதிய விதிமுறைகள் வெளியீடு!!அருணாச்சலில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - தேனிக்கு கொண்டு வரப்படும் தமிழக அதிகாரியின் உடல்தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் மீது வழக்குப் பதிவுதமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!மார்ச் 26-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: நாளை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும்.! அதிமுக தலைமை அறிவிப்பு

ஒடிசாவில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் உயிரிழப்பு

0

ஒடிசா: ஒடிசாவில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் உயிரிழந்தார். புவனேஸ்வர் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் உயிரிழந்தார்.

ஒடிசாவில் பிரஜாராஜ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றபோது அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. உதவி சார்பு ஆய்வாளர் கோபால் தாஸ் துப்பாக்கியால் சுட்டதில் நபா தாஸ் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது உயிரிழப்பிற்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இது குறித்து விசாரணை நடத்த குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் நபா தாஸ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் குண்டு அவரது நெஞ்சில் பாய்ந்து முதுகு வழியாக வெளியேறியுள்ளதால் இதயம், நுரையீரலில் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநில அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ்நகர் அருகே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்த நிலையில் அமைச்சர் நபா தாஸ் தனது வாகனத்தில் இருந்து இறங்கும்போது உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் அவர் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அமைச்சர் நபா தாஸ், நெஞ்சில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், இது குறித்து விசாரணை நடத்த குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். இந்த தாக்குதலுக்கான உண்மையான காரணம் தெரியவில்லை.

அமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உயரதிகாரியான கோபால் தாஸ் என்பவர், மிக நெருக்கத்தில் திடீரென நான்கைந்து முறை துப்பாக்கியால் அமைச்சரை நோக்கி சுட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். காவல் உதவி ஆய்வாளர் ஒருவரே அமைச்சரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.