Breaking News
சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை நீடித்து வருகிறது: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில்  15 மாவட்டங்களில் மழை தொடரும் எனவும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், கே.கே.நகர், அசோக்நகர், ஈக்காட்டு தாங்கல் சைதாப்பேட்டை கிண்டி, திருவான்மியூர் உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்து வருகிறது. அதைபோல சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தாம்பரம் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், விருகம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. சென்னை பட்டாளம் ஆஞ்சநேயர் கோயிலுக்குள் மழை நீர் புகுந்தது. சாலை முழுவதும் முழங்கால் அளவுக்கும் மேல் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம், செய்யூர் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

சென்னை வில்லிவாக்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னை நகர் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னை எம்.சி.ஆர்.நகர், பட்டினபாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.